Last Updated : 13 Jan, 2015 08:46 PM

 

Published : 13 Jan 2015 08:46 PM
Last Updated : 13 Jan 2015 08:46 PM

ஜம்மு காஷ்மீரில் திடீர் திருப்பம்: பிடிபி ஆட்சி அமைக்க ஒமர் ஆதரவு- ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்

ஜம்மு - காஷ்மீரில் ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயக கட்சிக்கு (பிடிபி) தேசிய மாநாட்டு கட்சி ஆதரவு அளித்துள்ளது.



இதுதொடர்பாக மாநில ஆளுநர் என்.என்.வோராவுக்கு தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா நேற்று முறைப்படி கடிதம் அனுப்பினார்.

87 உறுப்பினர்கள் கொண்ட காஷ்மீர் சட்டப்பேரவைக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடத்தப் பட்டது. கடந்த டிசம்பர் 23-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28, பாஜகவுக்கு 25, தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15, காங்கி ரஸுக்கு 12 இடங்கள் கிடைத்தன. ஆட்சியமைக்க 44 உறுப்பினர் களின் ஆதரவு தேவை. ஆனால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அண்மையில் அந்த மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சியமைக்க தேசிய மாநாட்டுக் கட்சி தானாக முன்வந்து ஆதரவு அளித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா ஆளுநர் என்.என்.வோராவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைப்பதற்கு முன்பு தேசிய மாநாட்டுக் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.

இதுதொடர்பான கடிதத்தை கட்சியின் மாகாண தலைவர் தேவேந்தர் சிங் ராணா, ஆளுநர் வோராவிடம் ஒப்படைத்தார்.

முன்னதாக ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் தேசிய மாநாட்டுக் கட்சி யின் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். அந்தக் கூட்டத்தில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு எடுக்கப்பட்டது.

மக்கள் ஜனநாயக கட்சி திடமான முடிவு எடுக்காமல் இருப் பதால்தான் இழுபறி நீடிக்கிறது. அதனால்தான் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. சட்டப் பேரவையும் முடக்கிவைக்கப்பட்டுள்ளது.

புதிய ஆட்சி அமைவதற்கு முன்பு தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்களை ஆளுநர் அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x