Published : 04 Jan 2015 09:44 AM
Last Updated : 04 Jan 2015 09:44 AM

குஜராத்தில் தீவிரவாதிகள் படகு வெடிப்பு: கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

குஜராத் கடற்பகுதியில் வெடிபொருட்களுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வந்த படகை இந்திய கடற்படை சுற்றிவளைத்ததால், தீவிரவாதிகள் அதை தகர்த்து மூழ்கடித்தனர். இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம், கூத்தங்குழி, கூட்டப்பனை, இடிந்தகரை உள்ளிட்ட 13 கடலோர கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளை கடலோர காவல்படை மற்றும் கடலோர காவல் பிரிவு போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கூடங்குளத்தில் அணுமின் நிலைய பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடலில் கடலோர காவல்படையினர் ரோந்து சென்ற வண்ணம் உள்ளனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x