Last Updated : 29 Jan, 2015 10:54 AM

 

Published : 29 Jan 2015 10:54 AM
Last Updated : 29 Jan 2015 10:54 AM

ரூ.3,200 கோடி பரிமாற்ற விலை வழக்கு: வோடபோன் விவகாரத்தில் அரசு மேல் முறையீடு செய்யாது

வோடபோன் தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்துக்கு சாதகமாக மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று அரசு திட்டவட்டமாக அறிவித் துள்ளது.

வோடபோன் நிறுவனம் பங்கு பரிமாற்ற விலை காரணமாக ரூ. 3,200 கோடி வரி செலுத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் அவ்விதம் வரி செலுத்தத் தேவையில்லை என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்ற முடிவை மத்திய அமைச்சரவை எடுத்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹ்தஹி-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் இங்கிலாந்தைச் சேர்ந்த மொபைல் சேவையளிக்கும் வோடபோன் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. ரூ.3,200 கோடி வருமான வரியாக செலுத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இவ்விதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

வருமான வரித்துறையினர் கூடுதல் வருமான வரி செலுத்த வேண்டும் என நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்தனர். துணை நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பை குறைத்து மதிப்பீடு செய்து அவற்றை வோடபோன் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியதாக வழக்கு தொடரப்பட்டது. இத்த கைய பரிவர்த்தனை 2010-ம் ஆண்டு நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x