Published : 07 Mar 2015 11:33 AM
Last Updated : 07 Mar 2015 11:33 AM
மேகதாதுவில் காவிரியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை முறியடிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசு தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், "கர்நாடக மாநிலம் மேகதாதுவில் புதிய அணை கட்டப்படும் என்று, உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி அம்மாநில சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்தார். ஆனால், அவரது கருத்தை கர்நாடக அரசும் மறுக்கவில்லை, தமிழக அரசும் கண்டிக்கவில்லை. கட்சித் தலைவர்களும் இவ்விவகாரத்தில் மவுனமாக உள்ளனர்.
தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கர்நாடகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT