Published : 23 Mar 2015 09:24 AM
Last Updated : 23 Mar 2015 09:24 AM

இந்திய-இலங்கை மீனவர் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: சென்னையில் நாளை நடைபெறுகிறது

இந்திய மற்றும் இலங்கை மீனவர் கள் இடையேயான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை (மார்ச் 24) சென்னையில் நடைபெறுகிறது.

இந்திய மற்றும் இலங்கை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களிடையே நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக இருநாட்டு அரசுகளின் ஏற்பாட்டில் இருநாட்டு மீனவ பிரதிநிதிகளிடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தையும், மே 12-ம் தேதி கொழும்பில் 2-ம் கட்ட பேச்சு வார்த்தையும் நடைபெற்றன. 3-ம் கட்ட பேச்சுவார்த்தையை மார்ச் 24-ம் தேதி சென்னையில் நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசும், இலங்கை அரசும் சென்னை பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளன. இதைத் தொடர்ந்து இலங்கை அரசு உயரதிகாரிகளுடன் மீனவர் சங்கத் தலைவர்கள் 10 பேர் சென்னை வருகின்றனர்.

தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் நாளை பேச்சுவார்த்தை நடை பெற இருப்பதை தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அலு வலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு உயரதிகாரிகள், மீனவ பஞ்சாயத்து தலைவர்கள் ஆகியோர் பங்கேற்று, இரு நாட்டு மீனவர் இடையேயான நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் விதமாக பேச்சு நடத்த உள்ளனர்.

இரு நாட்டு மீனவர் இடையேயான நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் விதமாக பேச்சு நடத்த உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x