Last Updated : 27 Mar, 2015 09:03 AM

 

Published : 27 Mar 2015 09:03 AM
Last Updated : 27 Mar 2015 09:03 AM

பவானி சிங் நியமனத்தில் தொடர்பில்லை: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு விளக்கம்

‘ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதில் எங்களுக்கு தொடர்பில்லை’ என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு கர்நாடக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக் கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட் டுள்ளது. `இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக உள்ள பவானி சிங்கை நீக்க வேண்டும், அரசு தரப்புக்கு உதவ அனுமதி அளிக்க வேண்டும், அதுவரை மேல்முறையீட்டு வழக்குக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இம்மனு, நீதிபதிகள் மதன் லோக்கூர், ஆர்.பானுமதி அடங் கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அன்பழகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜுனா ஆஜராகி, `விசாரணை நீதிமன்றத் தில் அரசு தரப்பில் ஆஜராகும் ஒரு வழக்கறிஞர், அதன் மேல் முறையீட்டு வழக்கில் ஆஜராக முடியாது. மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கின் வாதங் கள் அனைத்தும் குற்றவாளிக்கு ஆதரவாக உள்ளது. குற்றவாளி கள் தரப்பில் தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு செய்தபோதும், ஜாமீன் கோரிய போதும் பவானி சிங் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, அவரை வழக்கில் இருந்து நீக்கி உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நரிமன், `மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், அரசு தரப்பு விசா ரணை அமைப்பான லஞ்ச ஒழிப் புத்துறை சார்பில் பவானி சிங் நியமிக்கப்பட்டு வழக்கை நடத்தி வருகிறார். இதில் எந்த தவறும் இல்லை’ என்று வாதிட்டார்.

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.என்.ராவ், `ஜெயலலிதா மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசை பிரதிவாதியாக சேர்க்க வில்லை. எனவே, பவானி சிங் நியமனத்துக்கும் கர்நாடக அரசுக் கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று வாதிட்டார். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேல்முறையீட்டு வழக்குக்கு தடை விதிக்க கோரிய வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x