Last Updated : 03 Mar, 2015 12:41 PM

 

Published : 03 Mar 2015 12:41 PM
Last Updated : 03 Mar 2015 12:41 PM

பாகிஸ்தான் சென்றடைந்தார் வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர்

சார்க் யாத்திரையின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் சென்றடைந்தார் வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர்.

அவர் இன்று பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் அய்சாஸ் அகமது சவுத்ரியுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் சந்திக்கவுள்ளார்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து பாகிஸ்தான் வந்தடைந்த ஜெய்சங்கரை பாகிஸ்தானுக்கான இந்திய துணை தூதர் டி.சி.ஏ.ராகவன் வரவேற்றார்.

சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின்படி, வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர், அடுத்த வாரம் பாகிஸ்தான், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மார்ச் 1ம் தேதி பூடானுக்கும், 2ல், வங்கதேசத்துக்கும் சென்றார். இதைத் தொடர்ந்து, இன்று (3-ம் தேதி) பாகிஸ்தான் வந்துள்ளார்.

ஜெய்சங்கர் வருகைக்கு பாகிஸ்தான் ஏற்கெனவே வரவேற்பு தெரிவித்துள்ளது. அவரது வருகையால் தடைபட்ட இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் துளிர்க்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் மத்தியில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை பாகிஸ்தான் துணைத் தூதர் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் நடத்திய சந்திப்பின் காரணமாக தடைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x