Published : 27 Mar 2015 08:42 PM
Last Updated : 27 Mar 2015 08:42 PM
தகுதியுள்ள நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலபாரதி, ஏராளமானோருக்கு முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
அப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டுப் பேசுகையில் “தகுதியில்லாத நபர்களுக்கு மட்டும் முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர தகுதியுள்ளவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளிக்கையில், “முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்காக ரூ.4,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 37 லட்சம் பேர் முதியோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். தகுதியுள்ள நபர்கள் நீக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT