Published : 05 Feb 2015 09:59 AM
Last Updated : 05 Feb 2015 09:59 AM
சன் பார்மா மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திலீப் சங்வியின் தாயார் குமுத் தன் மருமகள் விபாவுக்கு, தன்னிடம் உள்ள 31 லட்சம் `சன் பார்மா' பங்குகளை அன்பளிப்பாகக் கைமாற்றியுள்ளார்.
இவற்றின் மதிப்பு ரூ.280 கோடியாகும். இந்தத் தகவல் மும்பை ஸ்டாக் எக்ஸேஞ்ச் மூலம் தெரிய வந்துள்ளது.
குமுத் சங்வியிடம் முன்பு 32.80 லட்சம் பங்குகள் இருந்தன. இதனால் சன் பார்மாவில் அவரின் பங்கு 0.16 சதவீதமாக இருந்தது. தற்போது தன்னிடம் இருந்த பங்குகளைக் கைமாற்றிவிட்டதால் அவரின் பங்கு 0.01 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேசமயம் விபா வின் பங்கு 0.28 சதவீதத்தில் இருந்து 0.43 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முகேஷ் அம்பானிக்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கோடீஸ்வரரான சங்விக்கு ரூ.1.08 லட்சம் கோடி சொத்துகள் இருக்கின்றன.
1983ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது இந்தியா வின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஜப்பானின் டாய்ச்சி சங்க்யோ நிறுவனத்திடம் இருந்து ரான்பாக்ஸி லேப்ஸ் நிறுவனத்தை சன் பார்மா வாங்கியது குறிப்பிடத்தக்கது.
சன் பார்மாவின் விற்பனையில் சுமார் 72 சதவீதத்துக்கும் அதிக மான விற்பனை அமெரிக்காவில் இருந்துதான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT