Published : 17 Feb 2015 03:34 PM
Last Updated : 17 Feb 2015 03:34 PM
திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் இன்று தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
அதாவது, விமான நிலையத்தின் முனைய மேலாளருக்கு இன்று அதிகாலை 4.25 மணிக்கு வந்த தொலைபேசி அழைப்பில், விமான நிலைய வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது 8 மணியளவில் வெடிக்கும் என்றும் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் விமான நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெடுகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
இந்த மர்ம தொலைபேசி அழைப்பு தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரிலிருந்து வந்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு பற்றி மேலும் விசாரிக்கையில், அழைப்பு மேற்கொள்ளப்பட்ட மொபைல் எண்ணுக்கான சிம் கார்டு, ஃபேன்சி கடை ஒன்றிலிருந்து வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. அந்த பேன்சி கடையில் பல்வேறு தொலைபேசி சேவை நிறுவனங்களின் சிம்கார்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.
மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT