Published : 21 Aug 2014 11:15 AM
Last Updated : 21 Aug 2014 11:15 AM
பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டின் பேரில் மும்பை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
போதைப்பொருள் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் தெற்கு மும்பையில் உள்ளது. இதில் எம்.டி.கெய்க்வாட் என்பவர் நீதிபதியாக பணியாற்றுகிறார். இந்நிலையில் நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர், கெய்க்வாட் தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக புகார் கொடுத்திருந்தார்.
இப்புகார் இம்மாத தொடக்கத்தில் பதிவுசெய்யப்பட்டு, மற்றொரு நீதிபதி மூலம் தொடக்கநிலை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெண் ஊழியரின் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து கெய்க்வாட் கடந்த 14-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மும்பை உயர் நீதிமன்ற பதிவாளர் ஷாலினி ஜோஷி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT