Published : 28 Aug 2014 08:45 AM
Last Updated : 28 Aug 2014 08:45 AM
கேரளத்தில் 5 நட்சத்திர அந்தஸ்துக்கு கீழ் உள்ள ஓட்டல்களில் மதுபான பார் களை மூட வழிவகுக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் புதிய மதுபான கொள்கைக்கு அம்மாநில அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
என்றாலும் மது வினியோகிக்கும் எலைட் கிளப்புகள் மற்றும் பீர், ஒயின் பார்லர்களுக்கு உரிமம் தொடர்பான பிரச்சினையில் முடிவு எடுக்காமல் அமைச்சரவை நிறுத்திவைத்துள்ளது.
அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் உம்மன் சாண்டி கூறும்போது, “எலைட் கிளப்புகள், பீர், ஒயின் பார்லர்கள் உட்பட பல விவகாரங்களை புதிய கொள்கையில் சேர்க்க வேண்டி யுள்ளது. இந்தப் பிரச்சினைகள் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தற்போது சுமார் 730 பார்களை மூடுவது என நாங்கள் உறுதியான முடிவு எடுத்துள்ளோம்” என்றார்.
இந்நிலையில் புதிய மதுபான கொள்கையின்படி 5 நட்சத்திர அந்தஸ் துக்கு குறைவான ஓட்டல்களில் செயல் படும் 312 பார்களை செப்டம்பர் 12-க்குள் மூடும்படி அரசு வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உள்ளது.
இவை தவிர, போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் கடந்த ஏப்ரலில் இருந்து மூடப்பட்டுள்ள 418 பார்களுக்கு உரிமம் புதுப்பிப்பதில்லை என்றும் அரசு முடிவு செய்துள்ளது.
மூடப்பட்ட 418 பார்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர்கள் கடந்த வாரம் கூடியபோது மாநிலத்தில் மதுபான வர்த்தகத்தை கணிசமாக குறைப்பது என புதிய கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.
அந்தோனியிடம் விவரித்தார் சாண்டி
இதனிடையே கேரளத்தில் மது விற்பனையை குறைக்கும் அரசின் புதிய மதுபான கொள்கை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனியிடம் விவரித்தார் முதல்வர் உம்மன் சாண்டி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT