Published : 17 Jul 2014 09:06 AM
Last Updated : 17 Jul 2014 09:06 AM

கிரிக்கெட் கிளப் விதிகளை மாற்றத் தயார்: சீனிவாசன் பேட்டி

வேட்டி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விரும்பியபடி, தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பின் விதிமுறைகளை மாற்றியமைக்கத் தயார் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் வளாகத்தில் அவருக்கு நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘வேட்டி அணிந்தவர்களை கிளப்பில் அனுமதிக்கவில்லை என்ற தகவல் எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் வெளியூரில் இருந்தேன். அதேவேளையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு என்ன மாதிரியான மாற்றங்களை விரும்புகிறதோ அதை நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம். உடை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் ஆலோசனைப்படி கிரிக்கெட் கிளப்பின் விதிமுறைகளை மாற்றத் தயாராக உள்ளோம்.” இவ்வாறு சீனிவாசன் கூறினார்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x