Published : 22 Mar 2015 12:36 PM
Last Updated : 22 Mar 2015 12:36 PM

`பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க தடைகளை நீக்க வேண்டும்’

பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க இருக்கும் தடைகளை நீக்கி எளிமைப்படுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார். மேலும் நிலையான வரிக் கொள்கை கள் இருந்தால் மட்டுமே அதிக வளர்ச்சி சாத்தியமாகும், வறுமையை ஒழிக்க முடியும் என்றார்.

அதிக வளர்ச்சி இருந்தால் மட் டுமே வறுமையை ஒழிக்க முடியும், மந்த பொருளாதாரத்தை வைத்து கொண்டு ஏழ்மையை நீக்க முடி யாது. ஆனால் மந்தமான பொருளா தாரம் வறுமையை அதிகரிக்கும் என்று நிர்வாக மேம்பாட்டு கல்வி மையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

மேலும் பன்னாட்டு நிறுவனங் களை ஊக்குவிப்பதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும். மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வளரும் போது இந்திய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக உயரும்.

தொழில் புரிய எளிமையான சூழல், நிலையான கொள்கை, தடைகளை உருவாக்காமல் எளிமையான சரியான முடிவுகளை எடுத்தல், கட்டுமானம் முதல் வரை வரி விதிப்பு வரை மாற்றங்கள் செய்தால் மட்டுமே சர்வதேச அளவில் போட்டிக்குரிய நாடாக இந்தியா இருக்கும் என்றார்.

நடப்பு நிதி ஆண்டில் 7.4 சதவீத அளவுக்கு இந்திய பொருளாதாரம் வளரும். வரும் நிதி ஆண்டில் 8 முதல் 8.5 சதவீதம் வரை பொருளா தாரம் வளர வாய்ப்பிருப்ப தாக எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x