Last Updated : 07 Mar, 2015 01:03 PM

 

Published : 07 Mar 2015 01:03 PM
Last Updated : 07 Mar 2015 01:03 PM

பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 50 பேர் பலி

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 50 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,289 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,000-த்துக்கும் அதிகமாகி உள்ளது. நாளுக்கு நாள் மருத்துவமனைகளுக்கு அறிகுறிகளுடன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சுகாதார அமைச்சக அறிக்கையின்படி, பலியானவர்களின் எண்ணிக்கை 1,289 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி வரை 23,153 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும் பலி எண்ணிக்கை 1,239 ஆக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x