Last Updated : 03 Mar, 2015 11:08 AM

 

Published : 03 Mar 2015 11:08 AM
Last Updated : 03 Mar 2015 11:08 AM

சிங்கப்பூரில் இந்தியருக்கு 16 ஆண்டு சிறை

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியர் ஒருவருக்கு, 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 12 பிரம்படிகளும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வசித்து வந்தவர் ராஜு அறிவழகன் (31). கட்டிடத் தொழிலாளி. ஒரு நாள் அவரது பர்ஸ் காணாமல் போனது. இது தொடர்பாக கட்டிடத் தொழிலாளியான பெரியசாமி தேவராஜன் (அப்போது அவருக்கு வயது 20) என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் கோபமடைந்த பெரியசாமி தேவராஜன், ராஜு அறிவழகனைத் தாக்கினார். அதன் காரணமாக அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் 2012-ம் ஆண்டு நடந்தது.

இதுதொடர்பான வழக்கு ஒன்று நேற்று சிங்கப்பூர் நீதிமன்றம் ஒன்றின் முன் வந்தது. அப்போது அதனை விசாரித்த நீதிமன்றம் பெரியசாமி தேவராஜனுக்கு 16 ஆண்டு சிறைத் தண்டனையும், 12 பிரம்படிகளும் வழங்கி உத்தரவிட்டது.

திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி தேவராஜன் முதலில் கொலைக் குற்றத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டார். பின்னர் அந்தக் குற்றம் 'மரணம் விளைவிக்கும் குற்றம்' என குறைக்கப்பட்டது.

இவ்வாறு குற்றத் தன்மை குறைக் கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x