Published : 10 Mar 2015 09:44 AM
Last Updated : 10 Mar 2015 09:44 AM

வாக்காளர் பட்டியல் முகாமில் ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், செல்போன் எண், இ-மெயில் விவரங்களை சேர்க்க நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று கூறியதாவது:

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகிய விவரங்களை சேர்க் கும் வகையில் தமிழகம் முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருக் கின்றன. ஆதார் அடையாள அட்டை பெறாதவர்கள் பயன்பெறும் வண்ணம் இந்த சிறப்பு முகா முடன் ஆதார் அட்டைக்கு விண் ணப்பிக்கும் முகாமையும் சேர்த்து நடத்த உள்ளோம். இதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாள ரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், செல்போன் எண், இ-மெயில் முகவரி சேர்ப்பது தொடர்பான பயிற்சி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், வாக்குச்சாவடி அளவி லும் ஏறத்தாழ 64 ஆயிரம் பேருக்கு அளிக்கப்பட உள்ளது. இதுதொடர் பாக மாவட்ட ஆட்சியர்களுடன் வருகிற 13-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தப்படும். மாநில அளவிலான பயிற்சி மார்ச் 19-ம் தேதியும், மாவட்ட அளவிலான பயிற்சி 24, 25-ம் தேதிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய நாட்களிலும் நடைபெறும்.

ஆதார் எண் உள்ளிட்ட விவரங் களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கான படிவங்கள் வீடுகள் தோறும் வழங்கும் பணி ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப் படும். தற்போது 50 லட்சம் வாக் காளர்கள் தங்கள் செல்போன் எண்ணை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருக்கிறார்கள். அனைத்து வாக்காளர்களின் செல்போன் எண்ணும் பட்டியலில் பதிவு செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x