Last Updated : 27 Mar, 2015 09:11 AM

 

Published : 27 Mar 2015 09:11 AM
Last Updated : 27 Mar 2015 09:11 AM

குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு: நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைக்க சல்மானுக்கு இன்று வாய்ப்பு

குடிபோதையில் கார் ஓட்டி, ஒருவரைக் கொன்றது மற்றும் மேலும் நான்கு பேரைக் காயப்படுத்தியது தொடர்பான வழக்கில் இன்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் நீதி மன்றத்தில் ஆஜராகவுள்ளார். தனது தரப்பு வாதத்தை இன்று அவர் முன் வைப்பார் என்று கூறப்படுகிறது.

கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது.

அந்த விபத்தில் சாலை யோரத்தில் படுத்திருந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

இதுதொடர்பான வழக்கில் இதுவரை 25 சாட்சியங்களுக்கு மேல் விசாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சல்மான் கான் இன்று ஆஜராக வேண்டும் என்று நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனை ஏற்று இன்று அவர் ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அப்போது அவருக்கு தனது தரப்பு வாதத்தை முன் வைக்க வாய்ப்பு வழங்கப்படுவதோடு, அவரைக் குறுக்கு விசாரணை செய்யவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

குடிபோதையில் கார் ஓட்டியது, அவ்வாறு கார் ஓட்டியபோது தன்னிடத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாதது உள்ளிட்ட புகார் கள் சல்மான் கான் மீது வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை சல்மான் இன்று வரை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x