Published : 11 Feb 2015 10:57 AM
Last Updated : 11 Feb 2015 10:57 AM

அத்வானி தலைமையில் எம்பிக்கள் குழுவினர் நாளை கல்பாக்கம் வருகை: பாதுகாப்புப் பணியில் 1,500 போலீஸார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணு மின் நிலைய வளாகத்துக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தலைமையிலான எம்பிக்கள் குழுவினர் நாளை வரவுள்ளதால், ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணு மின் நிலையம், பாவினி அணு மின் நிறுவனம் உள்ளிட்ட அணுசக்தி சார்ந்த பல்வேறு நிறு வனங்கள் கல்பாக்கம் அணுசக்தி வளாகத்தில் அமைந்துள்ளன.

இந்த அணுசக்தி வளாகத்தைப் பார்வையிடுவதற்காக, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தலைமையிலான நெறிமுறை குழு என்றழைக்கப்படும் எம்பிக்கள் குழுவினர் நாளை வரவுள்ளனர்.

அத்வானிக்கு தீவிரவாத அச் சுறுத்தல் உள்ளதால், போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். கல்பாக் கம், மாமல்லபுரம் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி விஜய குமார் தலைமையில், 3 எஸ்பி, 5 ஏடிஎஸ்பி, 15 டிஎஸ்பி உட்பட 1,500-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x