Published : 03 Feb 2015 09:42 AM
Last Updated : 03 Feb 2015 09:42 AM

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திருப்பம்: 9-ம் வகுப்பு மாணவியை தோழியே கொன்றது அம்பலம் - கம்மலுக்காக கிணற்றில் தள்ளி கொலை

திண்டிவனம் அருகே பள்ளி மாணவியை சக மாணவியே கிணற்றில் தள்ளி கொன்றது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 10-ம் வகுப்பு மாணவியை போலீஸார் கைது செய்தனர்.

திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சசிரேகா (14). ஓமந்தூரில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக் கிழமை பள்ளிக்கு சென்ற சசிரேகா மாலையில் வீடு திரும்பவில்லை. ரவியும் அவரது மனைவி கவிதா மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

இதையடுத்து அன்று இரவு கவிதா கிளியனூர் போலீஸில் புகார் அளிக்க சென்றார். ஆனால் கவிதாவின் புகாரை போலீஸார் வாங்க மறுத்ததாகக் கூறப் படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோடி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் சசிரேகாவின் சடலம் மிதந்தது. இதை அறிந்த அக்கம் பக்கத் தினர் கிளியனூர் காவல் நிலை யத்துக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து போலீ ஸார் சசிரேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீஸாரின் அலட்சியத் தாலேயே சசிரேகா இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி சாலை மறியல் போராட் டம் நடத்தினர் கிளியனூர் போலீ ஸாரின் சமரச பேச்சுவார்த் தைக்குபின் சாலை மறியல் கைவிடப்பட்டது.

மாணவி சசிரேகாவின் மரணம் தொடர்பாக கிளிய னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத் தினர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவ தாவது: சசிரேகா மரணம் தொடர் பாக மொளசூர் கிராமத்தை சேர்ந்த குப்பு என்பவரின் மகள் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. சசிரேகா படித்து வரும் பள்ளியிலேயே குப்புவின் மகள் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தோழி யான இருவரும் பள்ளி முடிந்து ஒன்றாகவே வீட்டுக்கு வருவது வழக்கம். கடந்த சனிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது கோடி பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகே சசிரேகாவும், குப்புவின் மகளும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது சசிரேகா அணிந்தி ருந்த புதிய கம்மலை குப்பு வின் மகள் வாங்கி போட்டு பார்த்துள்ளார்.

அப்போது திடீரென சசி ரேகாவை குப்புவின் மகள் கிணற்றுக்குள் தள்ளி விட்டுள் ளார். நீரில் தத்தளித்த சசிரேகா சிறிது நேரத்தில் இறந்துள்ளார். அவர் இறந்ததை உறுதி செய்த பின்னரே குப்புவின் மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு எதுவுமே தெரியாததுபோல இருந்துள்ளார். பள்ளியில் இருந்து சசிரேகாவுடன் கடைசியாக குப்புவின் மகள் தான் சென்றுள்ளார். இதன் அடிப்படையில் போலீஸார் அவரிடம் விசாரித்தபோதுதான் உண்மை தெரியவந்துள்ளது. இதையடுத்து குப்புவின் மகளை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x