Published : 23 Feb 2015 02:26 PM
Last Updated : 23 Feb 2015 02:26 PM
தமிழக சட்டப் பேரவையில் இருந்து புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியேற்றப்பட்டார்.
தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அவையில் பேச கிருஷ்ணசாமி அனுமதி கோரினார். அதற்கு அவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார்.
இதனையடுத்து அவையின் மையப் பகுதிக்குச் சென்ற கிருஷ்ணசாமி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டார்.
அவைத் தலைவர் தனபால், அவையிலிருந்து கிருஷ்ணசாமியை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து, பேரவையிலிருந்து கிருஷ்ணசாமி வெளியேற்றப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT