Published : 06 Feb 2015 11:49 AM
Last Updated : 06 Feb 2015 11:49 AM
சட்டக் கல்லூரி மாணவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று தா.பாண்டியன் அளித்த பேட்டி:
மாணவர்கள் படிக்கும் போதே பயிற்சி பெற்றுக் கொள்ள உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்துக்கு அருகிலேயே சட்டக் கல்லூரி அமைக்கப்பட்டது.
நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை யான சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றுவதை மாநில அரசு தவிர்க்கலாம். மாணவர்களின் போராட்டத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக பார்க்காமல், மாணவர் களுடன் பேசி இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.
கோவையில் மாநில மாநாடு
பிப்ரவரி மாதம் 25-ம் தேதி கோவை யில் தொடங்கவுள்ள மாநில மாநாட்டில் ஊழல் ஒழிப்பு மற்றும் மதவாத எதிர்ப்பு முக்கிய பிரச்சினைகளாக விவாதிக்கப்படும். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள நில கையகப்படுத்தும் சட்டம் நில பறிப்புச் சட்டமாகும். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த மாநிலக் குழு கூட்டத்தில், ‘இலங்கை அகதிகளை அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இலங்கைக்கு அனுப்பக் கூடாது’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT