Published : 14 Feb 2015 12:46 PM
Last Updated : 14 Feb 2015 12:46 PM

தமிழக அரசு தொழிற்கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

தமிழக அரசு தொழிற்கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வரும் 16 -ம் தேதி சென்னையில் தொடங்கும். தமிழக அரசு தொழிற்கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் பணபலம், அதிகார பலம் பயன்படுத்தப்பட்டது.'' என ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x