Published : 27 Jan 2015 11:07 AM
Last Updated : 27 Jan 2015 11:07 AM

கிருஷ்ணகிரி நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு

கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு நாளை (28-ம் தேதி) முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் உள்ள 8,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x