Published : 08 May 2014 10:15 AM
Last Updated : 08 May 2014 10:15 AM

நாட்டு குண்டு வெடிப்பு சம்பவம்: சிதம்பரத்தில் 3 பேர் கைது

மாரியப்பா நகரில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக 3 பேரை சிதம்பரம் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர் அருள்பிரசாத், சிதம் பரம் மாரியப்பா நகர் 2-வது தெற்கு குறுக்குத் தெருவில் வாடகைக்கு வசிக்கிறார். திண்டுக்கல்லில் பல வழக்குகளில் தேடப்படும் குற்ற வாளியான மோகன்ராம் என்ப வரை அந்த வீட்டில் அருள்பிரசாத் தங்கவைத்துள்ளார். அங்கு மோகன்ராம் தனது கூட்டாளி களுடன் இணைந்து, நாட்டு வெடி குண்டு தயாரித்துள்ளார். அப் போது நாட்டு வெடிகுண்டு வெடித் ததில் காயமடைந்த மோகன்ராம், புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக சிதம் பரம் போலீஸார், அருள்பிர சாத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவருடைய வாக்கு மூலத்தின் அடிப்படையில் அண்ணாமலைநகர் பட்டாபி, சீர் காழி சந்தோஷ் ஆகிய இருவரை யும் புதன்கிழமை கைதுசெய்தனர். மேலும் இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சுரேந்திரன் என்பவரைத் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள அருள் பிரசாத்தை சஸ்பெண்ட் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x