Published : 24 Jun 2014 10:27 AM
Last Updated : 24 Jun 2014 10:27 AM

75 அடி ஆழ கிணற்றில் விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு

விழுப்புரம் அருகே 75 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதிய வரை, உளுந்தூர்பேட்டை தீயணைப்புத்துறையினர் உயிரு டன் திங்கள்கிழமை மீட்டனர்.

உளுந்தூர்பேட்டை வட்டம் எல வனாசூர்கோட்டையைச் சேர்ந் தவர் ஷேக் இஸ்மாயில்(65). இவர் திங்கள்கிழமை எலவனாசூர் கோட்டை அருகேயுள்ள புத்தூர் கிராமத்திலுள்ள தனது வயலுக்கு சென்றார். அப்போது அங்குள்ள 75 அடி ஆழ கிணற்றில் எவ்வளவு நீர் இருக்கிறது என்று எட்டி பார்த்துள்ளார். திடீரென ஷேக் இஸ்மாயில் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

கிணற்றில் 4 அடி அளவு நீர் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது கூச்சலை கேட்டு, அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து உளுந்தூர்பேட்டை தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிவேல் தலைமை யில் தீயணைப்பு வீரர்கள் சம் பவ இடத்துக்கு விரைந்து ஷேக் இஸ்மாயிலை உயிருடன் மீட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x