Published : 11 Oct 2014 03:38 PM
Last Updated : 11 Oct 2014 03:38 PM

2-வது போட்டி: இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள்

டெல்லியில் நடைபெறும் இந்தியா-மே.இ.தீவுகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா சற்று முன் வரை 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன் எடுத்துள்ளது. 14 ஓவர்கள் முடிவடைந்துள்ளது.

ஷிகர் தவன் 1 ரன் எடுத்து 2வது ஓவரில் ஜெரோம் டெய்லர் வீசிய பந்தை மட்டைக்கும் கால்காப்பிற்கும் இடையே வாங்கி விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார்.

சற்று முன் 28 பந்துகள் ரன் எடுக்க மந்தம் காட்டி 12 ரன்கள் எடுத்த ரஹானே, டேரன் சாமியின் மெதுபந்துக்கு கவர் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ராயுடு 27 ரன்களுடன் இருக்கிறார். கோலி களமிறங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x