Published : 05 Apr 2014 11:14 AM
Last Updated : 05 Apr 2014 11:14 AM
கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்த பின் பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பா.ஜ.க.வுக்கு 43 கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. பா.ஜ.க. இந்த தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்துள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சி தமிழகத்துக்கு தொடர்ந்து அநீதிகளை செய்து வருகிறது.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் மீனவர்களின் துயர் துடைக்கப்படும். தமிழர்கள் வாழ்வு காக்கப் படும். இந்தியா வல்லரசாகும்.
குமரி மாவட்டத்தில் தேர்தல் ஆணைய நடவடிக்கை பாரபட்சமாக உள்ளது. பா.ஜ.க. தனித்தே 272 தொகுதிகளைக் கைப்பற்றும். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 300-க்கும் அதிகமான இடங்களைப் பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.
குமரி மாவட்டம் கோழிகோட்டுபொற்றையில் ஒரு குடிசை வீட்டில் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன்.
ஆதீனமும் அரசியலும்:
“தேர்தலுக்கு பிறகு மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோரும் நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்படாது. மதுரை ஆதீனம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் ஆன்மிகப் பணிகளை விடுத்து, அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது சரியல்ல” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT