Published : 19 Apr 2014 11:55 AM
Last Updated : 19 Apr 2014 11:55 AM

மகளிர் ஹாக்கி: தொடரை வென்றது இந்தியா

அயர்லாந்தின் துல்பின் நகரில் நடைபெற்ற 2-வது ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை தோற்கடித்தது. வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் இந்தியாவின் சௌந்தர்யா யேந்தலா முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 20-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு அடுத்த கோல் கிடைத்தது. அந்த கோலை சுனிதா அடித்தார்.

இதன்பிறகு அயர்லாந்தின் நிகோலே இவான்ஸ் ஒரு கோலடித்தபோதும், அந்த அணியால் தோல்வியில் இருந்து தப்ப முடியவில்லை. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்தியா. முன்னதாக முதல் ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தைத் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x