Last Updated : 12 Aug, 2014 02:53 PM

 

Published : 12 Aug 2014 02:53 PM
Last Updated : 12 Aug 2014 02:53 PM

மீண்டும் நாயகனாக களமிறங்கும் வடிவேலு

'தெனாலிராமன்' இயக்குநர் யுவராஜ் இயக்கும் அடுத்த படத்திலும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வடிவேலு.

வடிவேலு, மீனாட்சி தீக்‌ஷித் உள்ளிட்ட பலர் நடிப்பில், யுவராஜ் இயக்கிய படம் 'தெனாலிராமன்'. ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்தது. நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, மீண்டும் நாயகனாக அப்படத்தில் நடித்ததால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்போடு மீண்டும் இக்கூட்டணி இணைந்து படம் பண்ண போகிறார்கள்.

இது குறித்து இயக்குநர் யுவராஜிடம் கேட்ட போது, "படம் முழுக்க 1965 - 1970 காலகட்டப் பின்னணியில் படமாக்கப்பட உள்ளது. துளியும் ஹீரோயிஸம் இல்லாத முழு நீள காமெடிப் படம். படங்களில் அவ்வப்போது காமெடி சீன்களில் வடிவேலு, மதுரை பாஷை பேசுவதே அமர்க் களமாக இருக்கும். இந்த படம் முழுவதும் அவர் தனது ஃபேவரிட் மதுரை பாஷையைப் பேசி அசத்த உள்ளார்.

இசை இமான். ஒளிப்பதிவு கோபி அமர்நாத், பத்மஸ்ரீ தோட்டாதரணி கலை இயக்குநர், எடிட்டிங் ராஜா முகமது என்று ஒரு அற்புதமான கூட்டணியோடு களமிறங்குகிறோம். ‘ஓஹோ பிக்சர்ஸ்’ ஜி.ராம்குமார் தயாரிக்கிறார். படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x