Published : 13 Apr 2015 09:37 AM
Last Updated : 13 Apr 2015 09:37 AM

மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

அத்தியாவசிய மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திரத்தில் பலியான தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக நிதி வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

ஆந்திரத்தில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தொழி லாளர்களின் உடலை எய்ம்ஸ் மருத்துவர்களைக் கொண்டு மீண்டும் பிரேதப்பரிசோதனை செய்ய வேண்டும்.

பலியான தொழிலாளர்களின் மனைவிகளுக்கு அங்கன்வாடிகளில் பணி வழங்க வேண்டும். பாதிக் கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக நிதி வழங்க வேண்டும்.

புற்றுநோய், காசநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் களுக்கான அத்தியாவசிய மருந்து களின் விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் விளைவாக அத்தியாவசிய மருந்துகளின் விலை 3.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x