Published : 05 Feb 2015 10:01 AM
Last Updated : 05 Feb 2015 10:01 AM

ஜனவரியிலேயே விமானியை எரித்துக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்: ஜோர்டான் அரசு தகவல்

சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிர வாதிகளை ஒடுக்க, விமானங்கள் மூலம் பல்வேறு நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

தாக்குதலில் ஈடுபட்ட போது ஜோர்டான் விமானம் ஒன்று சிரியாவில் நொறுங்கி விழுந்தது. அதில் உயிர் பிழைத்த விமானி முவத் அல் கசாபேவை தீவிரவாதிகள் கடத்தினர். அதேபோல் ஜப்பான் பத்திரிகையாளர் உட்பட 2 பேரும் கடத்தப்பட்டனர். அவர்களை விடு விக்க வேண்டுமானால், ஜோர்டான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐ.எஸ். பெண் தீவிரவாதி சாஜிதா அல் ரிஷாவியை விடுவிக்க வேண் டும் என்று நிபந்தனை விதித்தனர்.

இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த 2 பேரின் தலையைத் துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். இப் போது ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்துக் கொன்ற காட்சிகள் அடங்கிய வீடியோவை இணைய தளத்தில் வெளியிட்டுள் ளனர். இதுகுறித்து ஜோர்டான் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், `‘விமானி கசாபேவை கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதியே தீவிரவாதிகள் கொன்றுள் ளனர். வீடியோவை இப்போது வெளியிட்டுள்ளனர்’’ என்று கூறியுள்ளது.

பெண் தீவிரவாதியை விடு வித்து விமானியை மீட்க ஜோர்டான் அரசு முடிவு செய்தது. எனினும், விமானி கசாபே உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தைத் தர வேண்டும் என்று ஜோர்டான் அரசு கூறியது. ஆனால், ஆதாரங் கள் தராமல் அவரை கொன்றதற் கான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x