Published : 05 Feb 2015 08:23 PM
Last Updated : 05 Feb 2015 08:23 PM
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து தேர்தல் குழுவின் திமுக பொறுப்பாளருடன் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.
திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இந்த ஆலோசனையில் ஸ்டாலின் ஈடுபட்டார்.
மாவட்ட செயலர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோரை ஸ்டாலின் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
வரும் 13 -ம் தேதி ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. 9-ம் தேதியில் இருந்து 11 -ம் தேதி வரை மூன்று நாட்கள் ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT