Published : 11 Feb 2015 11:47 AM
Last Updated : 11 Feb 2015 11:47 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று உத்தரவிட்டார்.

பணியிடம் மாற்றப்பட்ட வட்டாட்சியர்கள் மற்றும் அவர்களது புதிய பணியின் விவரம்: கே.இளங்கோவன்-நீதித்துறை அலுவலக மேலாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சி.கீதாலட்சுமி-தனி வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆர்.காஞ்சனமாலா-கோட்ட கலால் அலுவலர் காஞ்சிபுரம், எஸ்.பரிமளவதனி-தனி வட்டாட்சியர் மதுராந்தகம், எக்ஸ்.பென்டின்-கோட்ட நேர்முக உதவியாளர் மதுராந்தகம், எம்.புஷ்பலதா-தனி வட்டாட்சியர் சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டம், பி.கியூரி-கலால் மேற்பார்வையாளர் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் காஞ்சிபுரம், கே.ராஜம்மாள்-தனி வட்டாட்சியர் அரசு கேபிள் டிவி நிறுவனம் காஞ்சிபுரம், ஏ.கவுசல்யா-தனி வட்டாட்சியர் திருக்கழுக்குன்றம், வி.வசந்தா-தனி வட்டாட்சியர் நில எடுப்பு வெளிவட்டபாதை திட்டம் பூந்தமல்லி, எம். இப்ராஹீம்-நேர்முக உதவியாளர் மாவட்ட வழங்கல் துறை காஞ்சிபுரம், பெ.தியாகராஜன்-தனி வட்டாட்சியர் நில எடுப்பு ஒரகடம், வி.விமல்குமார்-வட்டாட்சியர் செய்யூர், எம்.ரங்கராதன்-தனி வட்டாட்சியர் திருப்போரூர், ஆர்.பிரகதா-வட்டாட்சியர் சோழிங்கநல்லூர், எஸ்.தனலட்சுமி-வட்டாட்சியர் திருக்கழுக்குன்றம், எஸ்.இளங்கோவன்-தனி வட்டாட்சியர் நில எடுப்பு சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை திட்டம் காஞ்சிபுரம்.

மேலும், காலியாக உள்ள தாம்பரம் நத்தம் நிலவரித் திட்டத்தின் தனி வட்டாட்சியர் பணியிட பொறுப்பை, ஆலந்தூர் நகர நிலஅளவை திட்ட தனி வட்டாட்சியர் கூடுதலாக கவனிப்பார். இதேபோல், காலியாக உள்ள தாம்பரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பணியிடத்தை, தாம்பரம் வட்டாட்சியர் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள வட்டாட்சியர்கள் அனைவரும் உடனடியாக பொறுப்புகளை ஏற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x