Last Updated : 03 Feb, 2015 11:41 AM

 

Published : 03 Feb 2015 11:41 AM
Last Updated : 03 Feb 2015 11:41 AM

கிரண்பேடியின் தேர்தல் உதவியாளர் ராஜினாமா வாபஸ்

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு சில தினங்களே இருக்கும் நிலையில், பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடியின் அரசியல் உதவியாளர் நரேந்திர தாண்டன் அக்கட்சியை விட்டு விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், “கிரண்பேடி சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்கிறார். டெல்லி முதல்வர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட விதம் என்னை மனதளவில் பாதித்துள்ளது. 30 ஆண்டுகளாக நான் கட்சியில் இருந்து வருகிறேன். கிரண்பேடி எங்களிடம் அதிகாரம் செலுத்தும் விதம் பொறுத்துக்கொள்ள முடியாத வகையில் உள்ளது. இதற்கு மேலும் என்னால் பணியாற்ற முடியாது” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பாஜக மேலிடத் தலைவர்கள் தாண்டனை சமாதானப்படுத்தினர். அதன்பின் தனது ராஜினாமா கடிதத்தை அவர் வாபஸ் பெற்றார். இந்த பிரச்சினை குறித்து கிரண்பேடி பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x