Published : 27 Feb 2015 08:01 PM
Last Updated : 27 Feb 2015 08:01 PM
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக சட்ட ஆணையர் சகாயம் 8-ம் கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளார்.
இதில் கப்பல் போக்குவரத்துத் துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, வணிக வரித்துறை, கால்நடை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அளிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், துறைக்கு ஏற்ற வகையில் கேள்விகள் தயார் செய்யப்பட்டு அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான பதில்களை அறிக்கையாக தயார் செய்து ஞாயிற்றுக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சகாயம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று தொடங்கிய 8-ம் கட்ட ஆய்வு மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக பெறப்பட்ட வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குவாரிகளில் நடைபெற்ற சந்தேக மரணங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT