Published : 05 Feb 2015 10:05 AM
Last Updated : 05 Feb 2015 10:05 AM
டெல்லி தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் வருகிற தேர்தலில் அக்கட்சி 51 இடங்களைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பாரதிய ஜனதா கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 4 இடங்களையும் பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பு குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் கூறும்போது, "அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வராக வர வேண்டும் என்று 53 சதவீத வாக்காளர்களும், பா.ஜ.க.வின் கிரண்பேடி முதல்வராக வேண்டும் என்று 24 சதவீத வாக்காளர்களும் விரும்புகிறார்கள்" என்றார்.
மேலும் அவர், "ஆம் ஆத்மி கட்சி 46 சதவீத வாக்குப் பங்கையும், பா.ஜ.க. 33 சதவீத வாக்குப் பங்கையும், காங்கிரஸ் 11 சதவீத வாக்குப் பங்கையும், இதர கட்சிகள் 10 சதவீத வாக்குப் பங்கையும் பெறும்" என்று கூறியுள்ளார்.
இதேபோல இந்தியா டுடே-சிஸெரோ நடத்திய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி 38 முதல் 46 இடங்கள் வரை பிடிக்கும் என்றும், பா.ஜ.க. 19 முதல் 25 இடங்கள் வரை பிடிக்கும் என்றும் காங்கிரஸ் 3 முதல் 7 இடங்கள் வரை பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT