Published : 31 Jan 2015 10:06 AM
Last Updated : 31 Jan 2015 10:06 AM

குரூப் 1 தேர்வு தகுதியானவர் விவரம் வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

உதவி கலெக்டர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான 79 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஜுலை 2014ல் தேர்வு தகுதித் தேர்வு நடைபெற்றது.

இதில் 70 ஆயிரத்து 547 பேர் எழுதியதில் 4,389 பேர் முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பெயர் விவரம் www.tnpsc.gov.in இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் மே 2, 3 மற்றும் 4-ம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x