Published : 16 Jan 2015 10:28 AM
Last Updated : 16 Jan 2015 10:28 AM

வக்கீல் போல் குறுக்கு விசாரணை செய்கிறார்கள்: செய்தியாளர்கள் மீது சசி தரூர் குற்றச்சாட்டு

சில செய்தியாளர்கள், என்னிடம் கேள்விகள் என்ற போர்வையில் வக்கீல் போல் குறுக்கு விசாரணை செய்கின்றனர் என காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், சுனந்தா புஷகரின் கணவருமான சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "சில செய்தியாளர்களிடம் என்னிடம் வக்கீல்போல, நீதிபதி போல கேள்வி எழுப்புகிறார்கள். எனது வழக்கறிஞரின் அறிவுரையின் பேரிலேயே நான் அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறேன்.

வழக்கு விசாரணையில் நான் போலீஸுக்குதான் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். செய்தியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க தேவையில்லை.

ஒரு இந்திய பிரஜ்ஜையாக எனக்கு என்ன உரிமைகள், சலுகைகள் இருக்கிறதோ அதுவே எனக்கு போதுமானது. அதைத்தவிர புதிதாக நான் எதையும் எதிர்ப்பார்க்கவில்லை" என கூறியுள்ளார்.

சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக அண்மையில் டெல்லி போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x