Published : 20 Jan 2015 09:48 AM
Last Updated : 20 Jan 2015 09:48 AM
மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜகியுர் ரஹ்மான் லக்வியின் காவலை பாகிஸ்தான் நீதிமன்றம் மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளது. 2008 மும்பை தாக்குதல் சம்பவத் தில் மூளையாக செயல்பட்ட லக்வி தற்போது பாகிஸ்தான் சிறையில் உள்ளார். அந்த நாட்டு உயர் நீதிமன்றம் அண்மையில் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உச்ச நீதிமன்றம் இரு வாரங்களுக்கு முன்பு ரத்து செய்தது. மேலும் லக்வியின் வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு உயர் நீதிமன்றத்துக்கு உத்தர விட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லக்வியின் காவலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT