Last Updated : 24 Oct, 2014 01:37 PM

 

Published : 24 Oct 2014 01:37 PM
Last Updated : 24 Oct 2014 01:37 PM

ஆப்கான் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மர்ம நபர் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானின் நங்கஹர் மாகாணத்தில் சாலையோரம் சென்ற காரை நோக்கி மர்ம நபர் சரமாரியாக துப்பக்கிச் சூடு நடத்தினார். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இந்த கொடூர தாக்குதலை நடத்திய மர்ம நபர் குறித்த தகவல் வெளியாகவில்லை என்று உள்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x