Published : 02 Sep 2014 12:00 AM
Last Updated : 02 Sep 2014 12:00 AM

ரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் 5 பேர் சிக்கினர்

ரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்த 5 பேர் தாம்பரத்தில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சித்தாலப்பாக்கத்தை சேர்ந்தவர் ரவி. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாம்பரம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து நடந்து சென்றார். அப்போது இருளில் பதுங்கி நின்ற இரண்டு பேர் அவரை கத்திமுனையில் மிரட்டி ரூ.3500 பணம், செல்போனை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த ரவி கூச்சலிட, அருகே இருந்தவர்கள் விரைந்து வந்து கொள்ளையர்கள் இருவரையும் பிடித்து தாம்பரம் போலீஸில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர்கள் கேளம்பாக்கம் அருகே உள்ள கொளப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ், விஜய் என்பதும் இரவு நேரத்தில் வரும் ரயில் பயணிகளிடம் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதும் தெரிந்தது. அவர்களது கூட்டாளிகள் மேலும் சிலர் இருப்பதும் விசாரணையில் தெரிந்து, படப்பையை சேர்ந்த கார்த்திக், பிரதீப், சதீஷ் ஆகியோரையும் போலீஸார் பிடித்தனர்.

5 பேரும் சேர்ந்து ரயில் பயணிகள் பலரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. 5 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x