Published : 22 Aug 2014 09:56 AM
Last Updated : 22 Aug 2014 09:56 AM
தெலங்கானா மாநிலத்தில் போலீஸார் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு பெண்ணின் தலையில் தோட்டா பாய்ந்தது. படுகாயமடைந்த அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேதக் மாவட்டம், நியூ உம்மாபூர் பகுதியில் போலீஸ் பயிற்சி மைதானம் உள்ளது. இங்கு வியாழக்கிழமை காலையில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்று தொலைவில் அதே பகுதியைச் சேர்ந்த சந்திர கலா (50) நடந்து சென்று கொண்டிருந்தார்.
போலீஸாரின் துப்பாக்கி யிலிருந்து சீறிப் பாய்ந்து வந்த தோட்டா, எதிர்பாராதவிதமாக சந்திரகலாவின் தலையில் பாய்ந்தது. இதில் அவர் அலறி துடித்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
படுகாயமடைந்த அவரை போலீஸாரும் கிராமத்தினரும் சேர்ந்து அருகே உள்ள சங்கா ரெட்டி கோகுல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத் யசோதா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சந்திர கலாவுக்கு அறுவை சிகிச்சை செய்து தலையில் இருந்த தோட்டா அகற்றப்பட்டது. ஆனாலும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT