Published : 08 Apr 2014 01:18 PM
Last Updated : 08 Apr 2014 01:18 PM

அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் விவகாரம்: மே.வங்க அரசு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

அதிகாரிகள் இடமாற்றம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி மே.வங்க அரசு கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், அதிகாரிகள் இடமாற்றம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மறுப்பு:

தேர்தல் ஆணைய உத்தரவை ஏற்று அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியாது என மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு மாவட்ட நீதிபதியையும் 5 காவல்துறை அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் இட மாற்றம் செய்து உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை ஏற்க முடியாது என ஹூக்லியில் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடுவதால் ஏற்படும் குழப்பங்களும் தான் பொறுப்பேற்கப்போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

சதிகளுக்கு அச்சமில்லை:

முன்னதாக, பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, "மத்திய அரசுடனும், பாஜகவுடனும் இணைந்து தேர்தல் ஆணையம் தனக்கு எதிராக சதி செய்வதாக குற்றம் சாட்டினார். எந்தவிதமான சதிச்செயல்களுக்கும் நான் அஞ்சப்போவதில்லை. தேர்தல் ஆணையம் மற்றவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்" என கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x