Published : 04 Feb 2014 05:35 PM
Last Updated : 04 Feb 2014 05:35 PM
தமது கூட்டணியில் இணைந்தால், தேமுதிகவை திருச்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுப்போம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "திருச்சி திமுக 10-வது மாநில மாநாடு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைபெறுவதால் முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாக அமையும்.
திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை திமுக தலைவர் அறிவிப்பார்.
திமுக மாநாட்டில் பங்கேற்க, கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
தேமுதிகவுக்கு அழைப்பு விடுப்பீர்களா? என்று கேட்டதற்கு, திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் அழைப்போம் என்றார் ஸ்டாலின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT