Published : 14 Apr 2014 11:02 AM
Last Updated : 14 Apr 2014 11:02 AM

பட்டாசுத் தொழில் பாதிப்பு: மார்க்சிஸ்ட் கண்டனம்

பட்டாசு உரிமக் கட்டணம், புதுப்பித்தல் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியதால் பட்டாசுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளார் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பட்டாசுத் தொழிலின் உரிமக் கட்டணத்தை மத்திய அரசு ரூ.15 ஆயிரத்தில் இருந்து 27 மடங்கு உயர்த்தி ரூ.4 லட்சமாக்கியுள்ளது. புதுப்பித்தல் கட்டணமும் ரூ.100-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. சீனா பட்டாசுகளை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. பட்டாசுத் தொழிலை கடுமையாக பாதிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.

இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் கடந்த 6-ம் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தம் செய்து வருகின்றனர். எனவே, உயர்த்திய கட்டணத்தை ரத்து செய்து, இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x