Published : 07 Apr 2015 01:23 PM
Last Updated : 07 Apr 2015 01:23 PM
ஏமனில் இருந்து மீட்கப்பட்ட தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 8 தமிழர்கள் இந்தியா வந்தடைந்தனர்.
ஏமனில் பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 8 தமிழர்கள் மீட்கப்பட்டு மும்பை விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் வந்தடைந்தனர். அவர்கள் தமிழக அதிகாரிகளால் வரவேற்கப்பட்டு பின்னர், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக, திங்கட்கிழமை மட்டும் தமிழகர்தைச் சேர்ந்த 31 பேர் நாடு திரும்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT