Published : 25 Apr 2015 01:20 PM
Last Updated : 25 Apr 2015 01:20 PM

விடைத்தாள் திருத்தும் பணி ஒரு மணிநேரம் புறக்கணிப்பு: ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் இன்று (சனிக்கிழமை) ஒரு மணி நேரம் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x