Published : 30 Mar 2015 12:27 PM
Last Updated : 30 Mar 2015 12:27 PM

ஜார்க்கண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர், 25 பேர் படுகாயமடைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா - அம்பிகாபூர் சாலையில் சென்று கொடிருந்த பேருந்து எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் 10 பேர் பலியாகினர். 25 பேர் படுகயமடைந்தனர்.

இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து பிஹார் மாநிலம் சஸாரமிலிருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்கருக்குச் சென்று கொண்டிருந்தது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x