Published : 19 Mar 2015 05:48 PM
Last Updated : 19 Mar 2015 05:48 PM

வல்லூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலையத்தின் 3வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும் இணைந்து தொடங்கியுள்ள வல்லூர் அனல் மின் நிலையம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது.

வல்லூர் அனல் மின் நிலையத்தின் 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.கடந்த மாதம் 25ம் தேதி நள்ளிரவு 3ம் அலகில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில், 3ம் அலகில் உள்ள கொதிகலனில் கடந்த 13ம் தேதி ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்த பழுதை நீக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். பழுது சரிசெய்யப்பட்டதை அடுத்து, 3வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

வல்லூர் அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளிலும் தற்போது மின் உற்பத்தி தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x